/* */

அங்கன்வாடி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சங்க கூட்டத்தில் தீர்மானம்

நாமக்கல் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில், மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

அங்கன்வாடி பணியாளர்களை பணி நிரந்தரம்  செய்யக்கோரி சங்க கூட்டத்தில் தீர்மானம்
X

நாமக்கல் மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநாட்டில், மாநில பொதுச் செயலாளர் டெய்சி பேசினார்.

நாமக்கல் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில், மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநாடு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கண்ணகி தலைமை வகித்தார். துணைத்தலைவர் பாண்டிமாதேவி வரவேற்றார். சிஐடியு மாவட்ட செயலாளர் வேலுசாமி மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். சங்க மாநில பொதுச் செயலாளர் டெய்சி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

மாநாட்டில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களை அரசு ஊழியராக்கி முறையான கால முறை சம்பளம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயலாளர் .ஜெயக்கொடி, பொருளாளர் பிரேமா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 March 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  4. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  5. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  6. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  8. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!