/* */

மோகனூரில் விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை

மோகனூரில் பெயிண்டர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

மோகனூரில் விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை
X

மோகனூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ஜெயபால் (27), பெயிண்டிங் தொழிலாளி. இவருக்கும் சோனியா என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில் ஜெயபாலுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த ஜெயபால், சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கிக் கிடந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர், அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயபால் உயிரிழந்தார். இது குறித்து மோகனூர் போலீஸ் எஸ்ஐ சுப்ரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 4 Dec 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  7. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?