/* */

குமாரபாளையம் பகுதியில் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

குமாரபாளையம் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் பகுதியில் நீர் வழித்தடங்களில்  உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
X

குமாரபாளையம் பகுதியில் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மனு அளிப்பதற்காக நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

குமாரபாளையத்தில் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் மக்கள் நீதி மய்யம் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் காமராஜ் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு தொகுதிகளில் உள்ள நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் செல்வதற்கு சரியான வடிகால் வசதி இல்லை.

இதன் காரணமாக பல்வேற குடியிருப்பு பகுதிகளிலும், போக்குவரத்து ரோடுகளிலும் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

எனவே குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு தொகுதியில் உள்ள நகராட்சி, டவுன் பஞ்சாயத்து மற்றும் கிராமப்புறங்களில் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து உடனடியாக அகற்றவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்