நாமக்கல், திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் தேசிய திறனாய்வுத் தேர்வு
நாமக்கல், திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில், 26 மையங்களில் நடைபெற்ற, தேசிய திறனாய்வுத் தேர்வில் 5,500 பேர் பங்கேற்றனர். 219 பேர் ஆப்சென்ட்.
HIGHLIGHTS
மத்திய அரசு, நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள், இடைநிற்றலை கைவிட்டு, உயர்கல்வி கற்க உதவியாகவும், மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக்கூடாது என்ற நோக்கிலும், ஆண்டு தோறும், தேசிய திறனாய்வு தேர்வு நடத்தி வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், தேசிய திறனாய்வு தேர்வு நடைபெற்றது. நாமக்கல் கல்வி மாவட்டத்தில் 12 இடங்களிலும், திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் 14 இடங்களிலும், மொத்தம் 26 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. 2021–-22ம் கல்வி ஆண்டில், 10 ஆம் வகுப்பு படித்து வரும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் திறனாய்வுத் தேர்வு எழுத பதிவு செய்திருந்தினர்.
காலை 9 மணி முதல், 11 மணி வரை, எம்.ஏ.டி தேர்வும், 11.30 முதல் 1.30 மணி வரை, எஸ்.ஏ.டி தேர்வும், மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. நாமக்கல் கல்வி மாவட்டத்தில் 2,539 பேர் பதிவு செய்ததில் 2,418 பேர் தேர்வில் பங்கேற்றனர். 121 பேர் ஆப்சென்ட். திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் 3,180 பேர் பதிவு செய்திருந்தனர், அதில் 3,082 பேர் கலந்து கொண்டனர். 98 பேர் ஆப்சென்ட். இரண்டு கல்வி மாவட்டங்களில் சேர்த்து, மொத்தம் 5,500 பேர் தேர்வு எழுதினர். 219 பேர் ஆப்சென்ட். இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு, பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பதற்கு மாதம் ரூ. 1,250 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இளங்கலை பட்டப்படிப்பு படிப்பதற்கு மாதம் ரூ.2,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாவட்டத்தில் நடந்த தேசிய திறனாய்வுத் தேர்வு மையங்களில், மாவட்ட கல்வி அலுவலர்கள் நாமக்கல் ராமன், திருச்செங்கோடு விஜயா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.