நாமக்கல் மாவட்டம் 10ம் வகுப்பு தேர்வில் 88.88% தேர்ச்சி: மாநிலத்தில் 27ம் இடம்
நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.88 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் 27ம் இடம் பெற்றுள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.88 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் 27ம் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 303 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 10,384 மாணவர்களும், 9,405 மாணவிகளும், மொத்தம் 19,789 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 8,839 மாணவர்களும், 8,750 மாணவிகளும் எ ன மொத்தம் 17,589 தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி 85.12 சதவீதம், மாணவிகள் தேர்ச்சி 93.04 சதவீதம். மாவட்த்தின் மொத்த தேர்ச்சி 88.88% சதவீதம். மாணவர்களை விட 7.92 சதவீதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி அடிப்படையில் நாமக்கல் மாவட்டம், மாநில அளவில் 27ஆம் இடம் பெற்றுள்ளது.
அரசு பள்ளிகள்:
நாமக்கல் மாவட்டத்தில் 153 அரசுப் பள்ளிகளை சார்ந்த 5,548 மாணவர்கள், 5,288 மாணவிகள் என மொத்தம் 10,836 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 4,281 மாணவர்கள், 4,780 மாணவிகள் என மொத்தம் 9,061 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 83.62% ஆகும்.
ஆதிதிராவிடர் நல பள்ளிகள்:
நாமக்கல் மாவட்டத்தில் 2 ஆதிதிராவிட நல பள்ளிகளைச் சார்ந்த 61 மாணவர்களும் 69 மாணவிகளும் என மொத்தம் 130 பேர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார்கள். இதில் 46 மாணவர்களும் 62 மாணவிகளும் என மொத்தம் 110 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 84.61 ஆகும்.
பழங்குடியினர் நல பள்ளிகள்:
நாமக்கல் மாவட்டத்தில் 5 பழங்குடியினர் நல (ஜி.டி.ஆர்.) பள்ளிகளை சார்ந்த 160 மாணவர்களும், 170 மாணவிகளும் என மொத்தம் 330 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 106 மாணவர்களும், 133 மாணவிகளும் என மொத்தம் 239 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 72.42% ஆகும்.
இந்த ஆண்டு மொத்தம் 99 பள்ளிகள், 10ம் வகுப்பில், 100 சதவீதம் பெற்றுள்ளன. மொத்தம் 14 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.