/* */

நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் 2.42 லட்சம் பேர்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 2.42 லட்சம் பேர் ஒரு தவணை கூட கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என கலெக்டர் கவலை தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் 2.42 லட்சம் பேர்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 2.42 லட்சம் பேர் ஒரு தவணை கூட கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என கலெக்டர் கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, 15 லட்சத்து 15 ஆயிரத்து 300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 12 லட்சத்து 72 ஆயிரத்து 938 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது. இது 84.02 சதவீதம் ஆகும். இன்னும் 2 லட்சத்து 42 ஆயிரத்து 062 பேர் முதல் தவணை தடுப்பூசியே போட்டுக்கொள்ளவில்லை.

2-ம் தவணை தடுப்பூசி, 9 லட்சத்து 54 ஆயிரத்து 375 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இது 63 சதவீதம் ஆகும். இன்னும் 3 லட்சத்து 18 ஆயிரத்து 563 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி பேட்டுக்கொள்ளவில்லை. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 27 கொ தடுப்பூசி முகாம்களில் 7 லட்சத்து 57 ஆயிரத்து 912 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இன்னும் கொரோனா நோய் தொற்றும் முற்றிலும் ஒழியவில்லை. எனவே மாவட்டத்தில் த டுப்பூசி போடாமல் உள்ள அனைவரும் உடனடியாக அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்களை தொற்றில் இருந்து காத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Updated On: 28 April 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்