Begin typing your search above and press return to search.
நாமக்கல்லில் கொரோனா தடுப்பூசி முகாமை தடுத்த போதை டிரைவர் கைது
நாமக்கல் நகரில் கொரோனா தடுப்பூசி முகாமை நடத்த விடாமல் தடுத்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள ஐயப்பன் கோவில் அருகே கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இந்த முகாமில் நாமக்கல் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்ரமணியம் (50), மேற்பார்வையாளர் தன்ராஜ், பணியாளர் ராஜன், டிரைவர் செந்தில்குமார் ஆகியோர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, புதன்சந்தை முத்துஉடையாளர்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் தனபால் (35) என்பவர் அங்கு குடிபோதையில் வந்து, தகாத வார்த்தையால் அலுவலர்களை திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்தும், முகாமை நடத்த விடாமல் தடுத்ததாக தெரிகிறது.
இது குறித்து துப்புரவு ஆய்வாளர் சுப்ரமணியம், நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த தனபாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.