/* */

நாமக்கல்லில் தீரன் சின்னமலை நினைவஞ்சலி நிகழ்ச்சி

தீரன் சின்னமலையின் நினைவு நாளை முனிட்டு நாமக்கல்லில் அவரது திருஉருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது

HIGHLIGHTS

நாமக்கல்லில் தீரன் சின்னமலை நினைவஞ்சலி நிகழ்ச்சி
X

நாமக்கல்லில் நடைபெற்ற தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்

நாமக்கல் மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில், மாவீரன் தீரன் சின்னமலையின் 216வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட கொமதேக செயலாளர் மாதேஸ்வரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தீரன் சின்னமலையில் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

கொமதேக நிர்வாகிகள், திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 3 Aug 2021 4:30 AM GMT

Related News