விதிமுறை மீறி வழங்கிய இலவச பட்டாக்களை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் விதிமுறை மீறி வழங்கிய இலவச பட்டாக்களை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
விதிமுறைகளை மீறி வழங்கிய இலவச பட்டாக்களை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி சார்பில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன். எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் ஒன்றியம், மரப்பரை கிராமம் தென்னமரத்துபாளையத்தில், அரசு புறம்போக்கு நிலத்தில், நிலம் இல்லாத ஏழைக்களுக்கு வழங்காமல், விவசாய நிலம் வைத்திருப்பவர்களுக்கும், போலீஸ் துறையில் பணியாற்றும் குடும்பத்துக்கும், திருமணம் ஆகாதவருக்கும், ஒரே ரேசன்கார்டில், இரண்டு பட்டாக்கள் என, 2018 முதல் 2021 வரை, 13 இலவச பட்டாக்கள் வழங்கபட்டுள்ளது.
அவற்றை ரத்து செய்து, நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும். சட்டவிதிகளை கடைபிடிக்காமல் பட்டாக்கள் வழங்கிய வருவாய்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஏளூர் வார்டு உறுப்பினர் ஜோதி, மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரமேஷ், துரைசாமி உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.