/* */

சம்பள நிலுவையை உடனடியாக வழங்க கொரோனா சிறப்பு நர்சுகள் கோரிக்கை

சம்பள நிலுவையை உடனடியாக வழங்கக்கோரி, கொரோனா சிறப்பு நர்சுகள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

HIGHLIGHTS

சம்பள நிலுவையை உடனடியாக வழங்க கொரோனா சிறப்பு நர்சுகள் கோரிக்கை
X

சம்பள நிலுவையை வழங்கக்கோரி, கொரோனா சிறப்பு நர்சுகள், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தனர்.

சம்பள நிலுவையை உடனடியாக வழங்கக்கோரி, கொரோனா சிறப்பு நர்சுகள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கொரோனா சிறப்பு பணி நர்சுகள் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறை சார்பில், கொரோனா சிகிச்சை பணிக்காக கடந்த மே மாதம் 50 நர்சுகள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தற்போது 42 நர்சுகள், பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களுக்கு, ஜூன் மாதம் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டது. பின்னர், கடந்த ஜூலை முதல் 5 மாதங்களாக யாருக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை. கொரோனா ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை. இதனால் நர்சுகளும், அவர்களது குடும்பத்தினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இம்மாத இறுதியுடன் தற்காலிக நர்சுகள் அனைவரையும் வேலை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே சம்பள நிலுவையை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 22 Nov 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  4. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  5. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  6. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
  8. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  9. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  10. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?