/* */

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் இயக்க மாநில செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். நாமக்கல் வெங்கடாசலம், மோகனூர் ராமலிங்கம், வேலூர் சண்முகம், திருச்செங்கோடு கதிர்வேல், ராசிபுரம் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேங்காய் விலை கடும் சரிவால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணையை விவசாயிகளிடம் இருந்து, தமிழக அரசு நேரடியாக கொள்முதல் கொள்முதல் செய்து ரேசன் கடைகள் மூலம் விற்பனை செய்யவேண்டும்.. கொப்பரை கொள்முதல் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒரு கிலோவிற்கு ரூ.130 ஆக அறிவிக்க வேண்டும். தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்கும் தடையை நீக்க வேண்டும்.

கோழிப்பண்ணைகளில் உற்பத்தியாகும் முட்டைக்கு, உற்பத்தி செலவில் இருந்து 50 சதவீதம் உயர்த்தி அரசே விலையை நிர்ணயிக்க வேண்டும். மரவள்ளி, நிலக்கடலை மற்றும் சோளத்திற்கு உற்பத்தி செலவிற்கு ஏற்ப அரசே விலை நிர்ணயிக்க வேண்டும். வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் செயல்படும், 100 நாள் வேலையை முற்றிலும் விவசாயத்திற்கு மாற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 10 Aug 2022 10:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  2. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  3. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  4. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  5. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  6. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  9. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...