/* */

சுதந்திர தின தேன் விழாவை முன்னிட்டு நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி

75வது சுதந்திர தின தேன் விழா, தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் 25ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

சுதந்திர தின தேன் விழாவை முன்னிட்டு நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி
X

சுதந்திர தின தேன்விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 75வது சுதந்திர தின தேன் விழா, தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் 25ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் மக்கள் நீதி மன்றத் தலைவர் சாந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ஸ்ரீவித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், வக்கீல்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்துகொண்டு மகாத்மாகாந்தியின் தியாகங்கள், அவர் நாட்டுக்கு ஆற்றிய அரும்பணிகள், அவரின் அகிம்சை வழியில் கிடைத்த வெற்றிகள் குறித்து பேசினர். தொடர்ந்து, இலவச சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

அதையடுத்து நடந்த விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் துவக்கி வைத்தார். பேரணியில், சுதந்திரத்தின் வலிமை, காந்தியடிகளின் நேர்மை குறித்த பதாகைகளை ஏந்தி சென்றனர். சுப்ரீம் கோடர்டில் நடந்த தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின், 25வது ஆண்டு விழா குறித்து வீடியோகாட்சி காண்பிக்கப்பட்டது. திரளான நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 3 Oct 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  2. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  3. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  4. உலகம்
    சீனாவில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை கத்தியால் குத்திய பெண்
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    நூறு சதவீத கல்வி உதவி தொகையுடன் பட்டய படிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
  7. ஈரோடு
    சித்தோடு அருகே அடுத்தடுத்து வந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி...
  8. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  9. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. அரசியல்
    நாடு முழுவதும் மாற்றத்திற்கான புயல் வீசுகிறது: சொல்கிறார் ராகுல்...