/* */

ப.வேலூர் அருகே கார் கண்ணாடியை உடைத்து 4 பவுன் தங்க நகை திருட்டு

பரமத்திவேலூர் அருகே கார் கண்ணாடியை உடைத்து 4 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

ப.வேலூர் அருகே கார் கண்ணாடியை உடைத்து 4 பவுன் தங்க நகை திருட்டு
X

பரமத்திவேலூரில் கண்ணாடியை உடைத்து நகை திருடப்பட்ட கார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையத்தை சேர்ந்தவர் சோமு (55). இவர் பரமத்தி அருகே வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். சம்பவத்தன்று காலை சோமு தனது காரில் ப.வேலூர் சென்று, நகைக்கடையில் 4 பவுன் தங்க நகைகளை வாங்கிக் கொண்டு பட்டறைக்கு வந்தார்.

பின்னர் காரை பட்டறை முன் நிறுத்திய அவர், நகைகளை காரிலேயே வைத்து விட்டு பட்டறைக்குள் சென்று வேலை செய்துகொண்டிருந்தார். பின்னர் வீட்டுக்கு செல்ல தனது காரை எடுக்க வந்தார். அப்போது காரின் வலது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே பார்த்தபோது காரில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்க நகை திருட்டுப் போனது தெரியவந்தது.

இதுகுறித்து புகாரின் பேரில் ப.வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையைக் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகினறனர்.

Updated On: 4 Nov 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்