Begin typing your search above and press return to search.
ப.வேலூர் அருகே கார் கண்ணாடியை உடைத்து 4 பவுன் தங்க நகை திருட்டு
பரமத்திவேலூர் அருகே கார் கண்ணாடியை உடைத்து 4 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையத்தை சேர்ந்தவர் சோமு (55). இவர் பரமத்தி அருகே வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். சம்பவத்தன்று காலை சோமு தனது காரில் ப.வேலூர் சென்று, நகைக்கடையில் 4 பவுன் தங்க நகைகளை வாங்கிக் கொண்டு பட்டறைக்கு வந்தார்.
பின்னர் காரை பட்டறை முன் நிறுத்திய அவர், நகைகளை காரிலேயே வைத்து விட்டு பட்டறைக்குள் சென்று வேலை செய்துகொண்டிருந்தார். பின்னர் வீட்டுக்கு செல்ல தனது காரை எடுக்க வந்தார். அப்போது காரின் வலது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே பார்த்தபோது காரில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்க நகை திருட்டுப் போனது தெரியவந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில் ப.வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையைக் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகினறனர்.