நாமக்கல் மாவட்டத்தில் 26 தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம்: எஸ்.பி. உத்தரவு
நாமக்கல் மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் 26 தனிப்பிரிவு போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் 26 காவல் நிலையங்கள் உள்ளன. அப்பகுதியில் நடக்கும் முக்கிய சம்பவங்கள், காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் தெரிவிப்பதற்காக தனிப்பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு நியமிக்கப்பட்ட தனிப்பிரிவு போலீசார், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்வது வழக்கம்.
தற்போது, நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யாக சரோஜ்குமார் தாகூர் பொறுப்பேற்றுள்ளார். அவரது உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள, 26 தனிப்பிரிவு போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நாமக்கல் போலீஸ் நிலைய தனிப்பிரிவு போலீஸ் அருள், மோகனூருக்கும், அங்கிருந்த செல்வராஜ் பேளுக்குறிச்சிக்கும், பேளுக்குறிச்சி தனிப்பிரிவு போலீஸ் சேகர், மங்களபுரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மங்களபுரத்தில் பணியாற்றிய சிவப்பிரகாசம், நாமகிரிப்பேட்டைக்கும், அங்கிருந்த சக்திவேல் ராசிபுரத்துக்கும், ராசிபுரம் குணசேகரன் வெண்ணந்தூருக்கும், அங்கு பணியாற்றிய முத்துசாமி, ஆயில்பட்டி போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய தனிப்பிரிவு போலீஸ் ரவிக்குமார், திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கும், நல்லிபாளையம் ராஜா புதுச்சத்திரத்துக்கும், அங்கிருந்த சக்திவேல் மல்லசமுத்திரத்துக்கும், வாழவந்திநாடு ராஜா நல்லிபாளையத்துக்கும் என, 26 தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.