/* */

நாமக்கல் மாவட்டத்தில் 26 தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம்: எஸ்.பி. உத்தரவு

நாமக்கல் மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் 26 தனிப்பிரிவு போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 26 தனிப்பிரிவு  போலீசார் இடமாற்றம்: எஸ்.பி. உத்தரவு
X

நாமக்கல் மாவட்டத்தில் 26 காவல் நிலையங்கள் உள்ளன. அப்பகுதியில் நடக்கும் முக்கிய சம்பவங்கள், காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் தெரிவிப்பதற்காக தனிப்பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு நியமிக்கப்பட்ட தனிப்பிரிவு போலீசார், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்வது வழக்கம்.

தற்போது, நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யாக சரோஜ்குமார் தாகூர் பொறுப்பேற்றுள்ளார். அவரது உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள, 26 தனிப்பிரிவு போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நாமக்கல் போலீஸ் நிலைய தனிப்பிரிவு போலீஸ் அருள், மோகனூருக்கும், அங்கிருந்த செல்வராஜ் பேளுக்குறிச்சிக்கும், பேளுக்குறிச்சி தனிப்பிரிவு போலீஸ் சேகர், மங்களபுரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மங்களபுரத்தில் பணியாற்றிய சிவப்பிரகாசம், நாமகிரிப்பேட்டைக்கும், அங்கிருந்த சக்திவேல் ராசிபுரத்துக்கும், ராசிபுரம் குணசேகரன் வெண்ணந்தூருக்கும், அங்கு பணியாற்றிய முத்துசாமி, ஆயில்பட்டி போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய தனிப்பிரிவு போலீஸ் ரவிக்குமார், திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கும், நல்லிபாளையம் ராஜா புதுச்சத்திரத்துக்கும், அங்கிருந்த சக்திவேல் மல்லசமுத்திரத்துக்கும், வாழவந்திநாடு ராஜா நல்லிபாளையத்துக்கும் என, 26 தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On: 4 July 2021 4:46 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  3. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  4. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  5. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  6. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  7. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்
  8. வீடியோ
    BaluMahendra-வை அப்பா போல் கவனித்த Garudan Director !#balumahendra...
  9. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...