நாகையில் மண்பானையில் பொங்கலிட்டு கிராமமே கொண்டாடிய பொங்கல் விழா
நாகையில் பாரம்பரிய முறையில் பொங்கல் மண்பானை வைத்து சூரியனுக்கு பொங்கல் படையல் வைத்தனர்.
HIGHLIGHTS
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா, நாகப்பட்டினம் தெற்கு பால்பண்ணைச்சேரியில் நேற்று நடைபெற்றது. பொங்கல் விழாவை முன்னிட்டு, தெற்கு பால்பண்ணைச்சேரியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டு வாசலில் கரும்புகளை கோபுர வடிவத்தில் நிறுத்தி, பாரம்பரிய முறையில் பொங்கல் மண்பானை வைத்து சூரியனுக்கு பொங்கல் படையல் வைத்தனர்.
பொங்கல் பொங்கியதும் குழந்தைகள் முதல், அனைவரும் உணவு உண்ணும் தட்டுகளை ஒலியெழுப்பி பொங்கலோ பொங்கல் என்று குதூகலத்துடன் குரல் எழுப்பினர். பாரம்பரிய உடை அணிந்து 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் ஒன்று திரண்டு சமூக இடைவெளியை பின்பற்றி உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடினார். பொங்கிய பொங்கல் பானைகளை அனைத்தும் ஒரே இடத்தில் வைத்து பொங்கல் பானையை சுற்றி கும்மி பாடல்களை பாடி நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர். படையலிட்ட பின்னர், அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.