நாகை அருகே மின்னல் தாக்கி விவசாய பெண் கூலி தொழிலாளி உயிரிழப்பு
நாகை அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாய பெண் கூலி தொழிலாளி மின்னல்தாக்கி உயிரிழந்தார்.
HIGHLIGHTS
நாகை மாவட்டம் அம்பல் பகுதியை சேர்ந்தவர் ரேணுகா. இவர் தெற்கு வெளி ஆற்றங்கரையோரம் சக பெண்களோடு வயலில் விவசாய பணிகளை மேற்கொண்டு இருந்தார். அப்போது பயங்கர சத்தத்துடன் அப்பகுதியில் இடி விழுந்து விபத்து ஏற்பட்டது.
இடி சத்தத்தை கேட்டு விவசாய கூலி பெண் தொழிலாளிகள் அலறி அடித்து ஓடினார்கள். அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியில் அதே பகுதியை சேர்ந்த சித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ரேணுகாவை படுகாயத்துடன் உறவினர்கள் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
நாகை அருகே வயலில் பெண்கள் விவசாய பணிகளை செய்து கொண்டிருந்த போது மின்னல் இடி தாக்கி ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.