/* */

நாகையில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணிகள் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு முதற்கட்ட நிவாரண நிதி இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் பணிகள் தொடக்கம்.

HIGHLIGHTS

நாகையில் கொரோனா  நிவாரண நிதி வழங்கும் பணிகள் தொடக்கம்
X

கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் நிவாரண நிதி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து முதற்கட்ட தவணையாக நாகையில் இன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகப்பட்டினம் பொதுப்பணியாளர் கூட்டுறவு பண்டகசாலை முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் கட்ட தவணையாக 2000 ரூபாய் நிவாரண நிதியை வழங்கினார்.

பின்னர் கூறிய ஆட்சியர் பிரவீன் நாயர் மாவட்டம் முழுவதும் 95% டோக்கன் வழங்கும் பணி முடிவுற்று உள்ளதாகவும், நாகை வேதாரண்யம் கீழ்வேளூர் திருக்குவளை ஆகிய நான்கு தாலுகாவில் உள்ள 356 நியாயவிலை கடைகளில் 2 லட்சத்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் 2000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் நாகை மாலி திமுக மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 May 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  2. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  3. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  5. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  7. கரூர்
    கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!
  9. ஆன்மீகம்
    கரூர் மாரியம்மன் கோவிலில் துவங்கியது கம்பம் விடும் திருவிழா
  10. வீடியோ
    சென்னையில் மழை வெள்ளம் 4ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சி ?#chennai...