கரூர் மாரியம்மன் கோவிலில் துவங்கியது கம்பம் விடும் திருவிழா

கரூர் மாரியம்மன் கோவிலில் துவங்கியது கம்பம் விடும் திருவிழா
சிறப்பு அலங்காரத்தில் கரூர் மாரியம்மன்.
கரூர் மாரியம்மன் கோவிலில் கம்பம் விடும் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது.

கரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் நடைபெறும் கம்பம் விடும் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஒரு வார காலத்திற்கும் மேல் நடைபெறும் இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது உண்டு.

பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டிற்கான வைகாசி பெருவிழா நேற்று துவங்கியது. கரூர் பாலம்மாள் புரத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி கம்பம் கொண்டுவரப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மாலை அமராவதி ஆற்றில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கம்பம் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது வழிநெடுக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவிலை அடைந்ததும் கோவிலில் கம்பம் நடப்பட்டது.

கம்பம் நடும் விழா தொடங்கியதையடுத்து நாள்தோறும் பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு செய்கின்றனர் . 17ம் தேதி (வெள்ளி) பூச்செரிதல் விழா நடைபெறுகிறது. 16 ,17 ம் தேதிகளில் மகா சண்டியாக பெருவிழா நடைபெறுகிறது. ‌ 19ஆம் தேதி ஞாயிறு அன்று காப்பு கட்டுதல் 27ம் தேதி திங்கள் அன்று திருத்தேர் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் 27, 28, 29 ம்தேதிகளில் அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்துதல், பால்குடம், மாவிளக்கு எடுத்து நேர்த்திக் கடன் நிறைவேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய விழாவான ஆற்றுக்கு அனுப்பும் விழா 29ம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. கோவில் பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் இதனை தெரிவித்துள்ளார்.

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சிரமம் இன்றி சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

Tags

Next Story