/* */

மாதிரி வாக்குப்பதிவு- ஆர்வத்துடன் வாக்களித்த பொதுமக்கள்

மாதிரி வாக்குப்பதிவு- ஆர்வத்துடன் வாக்களித்த பொதுமக்கள்
X

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவு செயல் விளக்கத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர் .

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்டகலெக்டருமான பிரவீன் நாயர் உத்தரவின் பேரில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மாதிரி வாக்கு பதிவு செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாகை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மாதிரி வாக்கு பதிவு செயல் விளக்க நிகழ்ச்சியில் எப்படி வாக்களிப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குபதிவு செய்தனர். இதேபோல நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் மாதிரி செயல் விளக்க மாதிரி வாக்கு பதிவு நடைபெறுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தெரிவித்தார்.

Updated On: 6 March 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது