/* */

ரூ. 10 லட்சம் மானியத்தில் பண்ணை இயந்திரங்கள்

ஓசூர் பகுதியில் கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மானியத்தில் பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ரூ. 10 லட்சம் மானியத்தில் பண்ணை இயந்திரங்கள்
X

ஓசூர் அருகே விவசாயிகளுக்கு மானியத்தில் பண்ணை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது

கூட்டுப்பண்ணைய திட்டத்தில் ரூ. 10 லட்சம் மானியத்தில் பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டாரத்தில் 2020-21ம் நிதியாண்டின் கூட்டுப்பண்ணைய திட்டம், முகளூர் மற்றும் ஒன்னல்வாடி ஆகிய இரண்டு வருவாய் கிராமங்களில் நடைபெற்றது.

ஒவ்வொரு கிராமத்திலும் 20 விவசாயிகளை ஒருங்கிணைத்து ஒரு உழவர் ஆர்வலர் குழு அமைக்கப்பட்டு. ஒவ்வொரு கிராமத்திலும் 5 உழவர் ஆர்வலர் குழு அமைக்கப்பட்டது.

5 உழவர் ஆர்வலர் குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு உழவர் உற்பத்தியாளர் குழு உருவாக்கப்பட்டுள்ளன.

அதே போல் இரண்டு கிராமங்களிலும் இரண்டு உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அக்குழுக்களுக்கு பண்ணை இயந்திரங்கள் வாங்க கூட்டுப்பண்ணைய திட்டத்தில் ஒரு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு ரூ. 5 லட்சம் வீதம் இரண்டு குழுக்களுக்கு ரூ. 10 லட்சம் மானியத்தில் பண்ணை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் தலைமை வகித்து, பண்ணை இயந்திரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், வேளாண் துணை இயக்குநர் (விதை ஆய்வு) பச்சையப்பன், ஓசூர் வேளாண்மை உதவி இயக்குநர் மனோகரன், வேளாண்மை அலுவலர்கள் பன்னீர்செல்வம், ரேணுகா, துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், உதவி வேளாண்மை அலுவலர் மாதேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Updated On: 27 April 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...