/* */

கிருஷ்ணகிரியில் விநாயகர் சிலைகள் கே.ஆர்.பி.அணையில் கரைப்பு

கிருஷ்ணகிரியில் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை இன்று கே.ஆர்.பி. அணையில் பொதுமக்கள் கரைத்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரியில் விநாயகர் சிலைகள் கே.ஆர்.பி.அணையில் கரைப்பு
X

 கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையின் பின் பகுதியில் இன்று காலை முதல் விநாயகர் சிலைகளை  கரைத்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அரசு தடைவிதித்திருந்தது.

இதனால் பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் கடைகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகைளை வைத்திருந்தனர். விநாயகர் சதுர்த்தி முடிந்து மூன்றாவது நாளான இன்று விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்தனர்.

கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டாரங்களில் வீடுகளில் வைத்திருந்த சிறிய விநாயகர் சிலை மற்றும் 3 அடி வரையிலான விநாயகர் சிலைகளை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையின் பின் பகுதியில் இன்று காலை முதல் கரைத்தனர்.

இதையொட்டி அணையின் பின்புறம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். ஒரு சிலையை கரைக்க ஒன்றிரண்டு பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

மேலும் இந்து முன்னணி சார்பில் 20க்கும் மேற்பட்ட சிலைகளை ஊர்வலம் இன்றி காரில் கொண்டு வந்து அணையில் கரைத்தனர். இன்று மாலை வரை 75க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன.

Updated On: 12 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  2. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  3. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  4. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  5. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  6. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  7. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  8. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்