/* */

கிருஷ்ணகிரி அருகே பெரியார் சிலைக்கு தீ வைப்பு

கிருஷ்ணகிரி அருகே பெரியார் சிலைக்கு தீ வைப்பு
X

கிருஷ்ணகிரி அருகே பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததை கண்டித்து பொதுமக்கள் மற்றும் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் கத்தாளமேடு என்ற பகுதியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் இன்று அதிகாலை தீ வைத்துள்ளனர். சிலையின் மீது டயரை போட்டு அதற்கு தீ வைத்துள்ளனர். இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் திராவிடர் கழகத்தினர் சிலை முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரியார் சிலையை அவமதித்து தீ வைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மகாராஜகடை இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் உடனடியாக பெரியார் சிலை மீது தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக உறுதியளித்துள்ளார்.

Updated On: 7 March 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க