/* */

டாஸ்மாக் பணியாளர் கொலை: கரூரில் மதுபான கடைகள் அடைப்பு

டாஸ்மாக் விற்பனையாளர் கொலையை கண்டித்து டாஸ்மாக் கடைகள் மூடிய ஊழியர்கள் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் சிறிது நேரத்தில் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

டாஸ்மாக் பணியாளர் கொலை: கரூரில் மதுபான கடைகள்  அடைப்பு
X

டாஸ்மாக் ஊழியர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து  கரூர் மதுபான கடைகள் மூடப்பட்டன.

காஞ்சிபுரத்தில் அரசு மதுபான கடை விற்பனையாளர் துளசிதாஸ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து கரூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. விற்பனையாளர் துளசிதாஸ் படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டியும் கடைகள் மூடப்பட்டன. விற்பனை தொகையினை அபகரிக்கும் நோக்கத்துடன் கொலைவெறித் தாக்குதல் நடத்தி கொலை செய்யும் சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

உயிரிழந்த துளசிதாஸ் குடும்பத்திற்கு ரூ. 25 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரின் குடும்பத்திற்கு வாரிசு பணி வழங்க வேண்டும். 18 ஆண்டுகளாகியும் விற்பனை தொகையினை நேரடியாக கடைகளுக்கு வந்து வசூல் செய்ய முடியாத டாஸ்மாக் நிர்வாகத்தை வண்மையாக கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கடைகளை மூடிய பணியாளர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து டாஸ்மாக் உயர் அதிகாரிகள் வேண்டு கோளுக்கிணங்க டாஸ்மாக் மதுபானக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

Updated On: 5 Oct 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  3. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  4. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  5. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  10. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி