Begin typing your search above and press return to search.
கரூரில் போக்குவரத்து காவலர் போல உடையணிந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
கரூரில் போக்குவரத்து போலீசார் போல உடையணிந்து பாதுகாப்பான சாலை பயணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
HIGHLIGHTS
கரூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறை மற்றும் சமூக உரிமைகள் பாதுகாப்புக் கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே நடைபெற்றது.
கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்கள் போல உடையணிந்த இளைஞர்கள் நடனமாடி வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், அதிவேகமாக வாகனம் இயக்குதல் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.