/* */

கரூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: 15 பதவிக்கு 65 பேர் மனு தாக்கல்

மாவட்டத்தில் காலியாக உள்ள 15 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 65 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள 15 பதவிகளுக்காக 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி களுக்கான தேர்தலின் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகறுக்கான தேர்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 15 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒரு ஒன்றிய குழு உறுப்பினர், ஒரு ஊராட்சி தலைவர், 12 ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தக்கல் இன்றுடன் முடிவுற்றது. இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் கண்ணையன் அதிமுக சார்பில் என் முத்துக்குமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சுசிலா, தேமுதிக சார்பில் ராமசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதேபோல, கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 15 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு மொத்தம் 65 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.


Updated On: 23 Sep 2021 10:26 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்