கரூரில் 5 இடங்களில், 1000 பேருக்கு கொரோனா தடுப்பூசி
கரூரில் 5 இடங்களில் 1000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
HIGHLIGHTS
கரூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் 5 இடங்களில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா வைரஸ் 2 ம் அலை பரவலைை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும் தமிழக அரசு கொரோனா நோய் தொற்றிலிருந்து பொதுமக்களுக்களை காப்பதற்காக தடுப்பு ஊசி செலுத்தி வருகிறது.
கரூர் மாவட்டத்தில் இன்று கரூர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாவட்ட நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி மொத்தம் ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 5 இடங்களிலும் அதிக அளவில் பொதுமக்கள் திரண்டு தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தடுப்பூசி செலுத்தும் இடங்களில் காவல் துறையினர் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்குமாறு பொது மக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.