/* */

மாவட்ட ஊராட்சி துணை தேர்தல் ரத்து : முற்றுகையிட்ட அதிமுகவினர் கைது

மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால் அதிமுகவினர் தேர்தல் அதிகாரி வாகனத்தை முற்றுகையிட்டதால் கைது.

HIGHLIGHTS

மாவட்ட ஊராட்சி துணை தேர்தல் ரத்து : முற்றுகையிட்ட அதிமுகவினர் கைது
X

தேர்தல் அதிகாரி வாகனத்தை முற்றுகையிட்டதால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர்.

கரூர் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கரூர் மாவட்ட ஊராட்சியை பொருத்தவரை மொத்தம் உள்ள 12 உறுப்பினர்களில் அதிமுகவுக்கு 8 உறுப்பினர்கள் உள்ளனர். திமுகவிற்கு 4 உறுப்பினர்கள் உள்ளனர்.

மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த கண்ணதாசன் உள்ளார். துணைத் தலைவர் தேர்தல் இன்று இரண்டு முப்பது மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சரியாக 2.30 மணிக்கு அதிமுகவைச் சேர்ந்த 8 உறுப்பினர்களும், திமுகவைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும் மாவட்ட ஊராட்சி கூட்டத்திற்கு வந்தனர்.

அப்பொழுது துணை தலைவர் பதவிக்கு நிற்பவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என தேர்தல் நடத்தும் அலுவலரான மந்திராசலம் அறிவித்தார். இதையடுத்து அதிமுக சார்பில் திருவிகா துணைத் தலைவர் தேர்தலுக்கு போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

ஆனால் திமுக தரப்பினர் எழுந்து 10:30 மணிக்கு துணை தலைவர் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது இப்பொழுது பிற்பகல் இரண்டு முப்பது மணிக்கு நடத்துகிறீர்கள். இந்த குளறுபடியால் தேர்தலை நடத்த வேண்டாம் ஒத்தி வையுங்கள் என கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் மந்திராசலம் தேர்தலை ஒத்தி வைப்பதாக கூறி விட்டு வெளியேறினார். இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் தேர்தல் நடத்தும் அலுவலர் மந்திரத்திராசலத்தின் வாகனத்தை முற்றுகையிட்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்கள் தேர்தலை ஒத்தி வைத்ததற்கான காரணத்தை கேட்டு , கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் தேர்தல் நடத்தும் அலுவலர் மந்திராசலம் எந்தவித பதிலும் சொல்லாமல் இருந்தார். இதனால், அங்கிருந்த போலீசாருக்கும் அதிமுகவில் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரின் வாகனத்தை மறித்து முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 50 க்கும் அதிகமான அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் கரூர் வெள்ளியணை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 22 Oct 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்