பாலியல் தொல்லை வழக்கில் விரைந்து தண்டனை வழங்க சிபிஎம் ஆர்ப்பாட்டம்
டாக்டர் ரஜினிகாந்த் மற்றும் சிவசுப்பிரமணியன் மீது வழக்கை விரைந்து முடித்து தண்டனை வழங்க வலியுறுத்தல்.
HIGHLIGHTS
பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் ரஜினிகாந்த், சிவசுப்பிரமணியன் மீது விரைந்து விசாரணை நடத்தி உரிய தண்டனை வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கரூரில் 17 சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் ரஜினிகாந்த் மற்றும் அரவக்குறிச்சி பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கைது செய்யப்பட்ட சிவசுப்பிரமணியன் ஆகியோர் மீது உரிய விசாரணையை விரைந்து நடத்தி அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்.
மேலும் தமிழகம் முழுவதும் பள்ளி சிறுமிகளின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.