காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை
கரூரில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தரைக்கடை காய்கறி வியாபாரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
HIGHLIGHTS
கொரோனா தொற்று 2 வது அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தடுக்க கரூர் நகராட்சி பகுதியில் காமராஜர் மார்க்கெட், உழவர் சந்தை ஆகிய சந்தைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக கரூர் பேருந்து நிலைய வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொற்று பரவுதல் அதிகரித்து வரும் நிலையில் பேருந்து நிலைய வளாகத்தில் தரைக் கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளுக்கு கரூர் நகராட்சி கஸ்தூரிபாய் தாய் சேய் நல மையத்தின் மருத்துவ பணியாளர்கள் சார்பில் இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
இதில், 110 தரைக்கடை வியாபாரிகள், அவர்களது தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தரைக்கடை வியாபாரிகள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் இந்த பரசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்