/* */

கால்நடை வளர்ப்போருக்கு ரூ. 2 லட்சம் கடன் உதவி

கரூர் மாவட்டத்தில் கால் நடை வளர்ப்போருக்கு ரூ. 2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

கால்நடை வளர்ப்போருக்கு ரூ. 2 லட்சம் கடன் உதவி
X

மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்போருக்கு வங்கிகள் மூலம் புதிய கால்நடை கிசான் கடன் அட்டை மூலம் ரூ 2 லட்சம் வரை கடன் வழங்கவும், ஏற்கனவே வழங்கப்பட்ட கடன் அட்டைகளுக்கு ரூ .3 லட்சம் வரை கடன் தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான சிறப்பு முகாம் மாவட்டத்தின் அனைத்து கால்நடை மருந்தகங்களிலும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் வரும் 25.02.2022 வரை நடத்தப்படுகிறது. ஆர்வமுள்ள கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுகி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 2 புகைப்படம் ஆகியவற்றை இணைத்து சிறப்பு முகாமில் ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.

தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட வட்டியில் கடன் வழங்கப்படும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 Nov 2021 9:39 AM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  2. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  4. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  5. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  7. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  10. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...