Begin typing your search above and press return to search.
குமரியில் 6 நாட்களுக்கு பின்னர் தடுப்பூசி முகாம் மகிழ்ச்சியில் பொதுமக்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 நாட்களுக்கு பின்னர் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த 6 நாட்களாக முகாம்கள் நடைபெறாமல் இருந்தது, இந்நிலையில் இன்று கோவிஷீல்டு தடுப்பூசிக்கான முகாம்கள் நடைபெற்றது.
இதற்காக குமரி மாவட்டத்தில் 19 முகாம்களில் நேரடியாகவும் 10 முகாம்களில் ஆன் லைன் மூலமாகவும் டோக்கன் பெற்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.அதன் படி கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், குழித்துறை, மார்த்தாண்டம் உட்பட 29 மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் 4230 பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.