/* */

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

Tirupur News-திருப்பூா் கலெக்டர் அலுவலகத்துக்கு புகாா் அளிக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
X

Tirupur News-திருப்பூா் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பெண், தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புகாா் அளிக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களவைத் தோ்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வந்த வாராந்திர குறைதீா் முகாம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகாா் பெட்டியில் தங்களது கோரிக்கை மனுக்களை செலுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனுவுடன் வந்த பெண் ஒருவா் திடீரென தீக்குளிக்க முயன்றாா். உடனடியாக அங்கிருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து போலீஸாா் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினா்.

இதில் திருப்பூா் அருகே காளிபாளையம்புதூா் ஜி.என். காா்டனை சோ்ந்த ஜெயந்ரா என்பதும், அவா் தனியாா் ரியல் எஸ்டேட் மூலம் ரூ.13.50 லட்சத்துக்கு வீடு வாங்கியதாகவும், அதற்காக முன்பணமாக ரூ.3.35 லட்சம் செலுத்தியதாகவும், மேலும், 28 மாதங்களாக மாதம் ரூ.13 ஆயிரத்து 500 வீதம் செலுத்தியும் உள்ளாா். ஆனால், இதுவரை வீடு கிரையம் செய்து கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், கூடுதலாக பணம் கேட்டும் மிரட்டி வருகின்றனா். எனவே வீட்டை கிரையம் செய்து கொடுக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்து அனுப்பிவைத்தனா்.

Updated On: 30 April 2024 3:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  2. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  3. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  5. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  6. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  7. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  9. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  10. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...