/* */

வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்

பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள குரங்கு அருவி அருகே கொண்ட ஊசி வளைவு பகுதியில் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

HIGHLIGHTS

வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
X

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விபத்தில் காயமடைந்தவர்கள்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன். 55 வயதான இவர், 13 குழந்தைகள் மற்றும் 18 பெரியவர்கள் என 31 நபர்களை கடந்த 24 ஆம் தேதி அன்று திருவாவூரிலிருந்து ஐந்து நாள் பயணமாக கேரளா நோக்கி சுற்றுலா பயணம் அழைத்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் கேரளா மாநிலம் சென்று விட்டு வால்பாறை வழியாக வந்த இந்த சுற்றுலா பயணிகள் வால்பாறை பகுதியை சுற்றிப் பார்த்துள்ளனர். பின்னர் பொள்ளாச்சியை நோக்கி இரவு நேரத்தில் சுற்றுலா வாகனத்தில் வந்துள்ளனர் இந்நிலையில் வாகனத்தை ஓட்டி வந்த தினேஷ் (25 வயது) ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள குரங்கு அருவி அருகே கொண்ட ஊசி வளைவு பகுதியில் உள்ள பாறையில் மோதி வாகனம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு மற்ற சுற்றுலா பயணிகள் மற்றும் சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் சுற்றுலா மேற்கொண்ட 13 குழந்தைகள் மற்றும் 18 பெரியவர்கள் என 31 நபர்களுக்கும் படுகாயம் அடைந்த நிலையில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆழியார் காவல் நிலையம் மற்றும் காடம்பாறை காவல் நிலைய போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 30 April 2024 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  3. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  4. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  5. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  6. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  7. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  8. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  9. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  10. ஈரோடு
    ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...