/* */

நாளை +1 பொதுத்தேர்வு நாளை துவக்கம்: காஞ்சிபுரத்தில் 13902 மாணவர்கள் பங்கேற்பு

நாளை துவங்க உள்ள மேல்நிலை முதலாம் ஆண்டு அரசு பொது தேர்வில் 13,902 மாணவ, மாணவிகள் 50 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

HIGHLIGHTS

நாளை +1 பொதுத்தேர்வு நாளை துவக்கம்: காஞ்சிபுரத்தில் 13902 மாணவர்கள் பங்கேற்பு
X

அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் (பைல் படம்).

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அரசு பொது தேர்வுகள் கடந்த ஐந்தாம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த ஐந்தாம் தேதி பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வை 13 ஆயிரத்து 518 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த பத்தாம் தேதி தொடங்கிய நிலையில் 13 ஆயிரத்து 902 மாணவ, மாணவிகள் மாவட்டத்தில் எழுதினர்.

இந்நிலையில் நாளை பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வு துவங்க உள்ளது. நாளை தொடங்கி இம்மாதம் முப்பதாம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வினை 6881 மாணவர்களும், 7021 மாணவிகள் என மொத்தம் 13902 பேர் எழுதவுள்ளனர். மாணவ மாணவிகள் தேர்வு எழுத வசதியாக 50 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்க 85 சிறப்பு பறக்கும் படை நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை ஆய்வு மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Updated On: 9 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  8. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...