/* */

காஞ்சிபுரம் அருகே கொலை நடந்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

காஞ்சிபுரம் அருகே கொலை நடந்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே கொலை நடந்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது
X
சரவணன் கொலை செய்யப்பட்டு உடல் வீசப்பட்ட குளம் இது தான்.

காஞ்சிபுரம் அருகே குட்டையில் பிரேதம் மிதப்பதாக வந்த தகவலையடுத்து காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் பிரேதத்தை கண்டெடுத்து விசாரணை மேற்கொண்டனர்

இதில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி தாலுகா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஓரிக்கை அப்பாவு நகரைச் சேர்ந்த சரவணன் ( 34) என்பவர் கொத்தனார் வேலை செய்துவந்தவர் கடந்த 5ம் தேதி இரவு சரவணன் மதுபானக் கடையில் மது அருந்தியபோது அங்குவந்த ஓரிக்கை பகுதியை சேர்ந்த பாலு ( 40 ) மற்றும் குமரன் ( 40 ) ஆகிய இருவரிடம் சண்டையிட்டுள்ளார்.

இதுகுறித்து பாலு சரவணனின் வீட்டிற்கு சென்று அவரது தந்தை வெங்கடேசனிடம் மேற்படி சண்டையை பற்றி கூறிவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார் .

பின்னர் இது சம்பந்தமாக சரவணன் குமரனின் வீட்டின் அருகே சென்று கேட்டபோது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.அப்போது அங்கிருந்த பானு கட்டையால் சரவணனை தலையில் தாக்கியபோது மயங்கிவிட்டதாகவும், பின்பு சரவணனின் கை, கால்களை கட்டி ஓரிக்கைக்கு அடுத்துள்ள விஷ்ணு நகரில் உள்ள பட்டாசு குடோன் அருகில் உள்ள குட்டையில் வீசிவிட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இது சம்பந்தமாக எதிரிகளை விரைந்து பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜீலியஸ் சீசர் மேற்பார்வையில் , காஞ்சி தாலுகா காவல் ஆய்வாளர் இராஜகோபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டதில் எதிரிகள் இருவரும் கைதுசெய்யப்பட்டு காவல்நிலையம் கொண்டுவரப்பட்டனர்.

இவ்வழக்கில் ஒருமணி நேரத்திலேயே எதிரிகளை கைது செய்த காஞ்சி தாலுகா காவல் ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

Updated On: 8 April 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  2. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  3. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  4. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  5. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  8. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  9. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  10. குமாரபாளையம்
    மொழிப்போர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!