வாலாஜாபாத் வட்டத்தில் பல்வேறு ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு -வருவாய்த்துறை நடவடிக்கை
அரசு நீர்நிலை நிலங்களை ஆக்கிரமித்து பயிர் செய்துவந்த விளைநிலங்களை வாலாஜாபாத் வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை குழு மீட்டது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை உடனடியாக மீட்க வருவாய் துறைக்கு தமிழக அரசு ஆலோசனை வழங்கியது. அதன் அடிப்படையில் கடந்த இரு மாதங்களாக காஞ்சிபுரம் , உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு ஆக்கிரமிப்பு நிலங்களை முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் மீட்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வாலாஜாபாத் வட்டத்திற்கு உட்பட்ட இளையனார்வேலூர், ஆசூர், காவாந்தண்டலம், மேல்புத்தூர், வேடல் , விச்சந்தாங்கல் உள்ளிட்ட கிராம பகுதிகளில் நீர்நிலைப் பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு விளைநிலங்களாக இருந்து வந்தது.
வாலாஜாபாத் வட்டாட்சியர் லோகநாதன் தலைமையிலான வருவாய்த்துறை குழுவினர் இன்று ஆக்கிரமிப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட பின் அந்நிலங்களை மீட்கும் பணியை ஜேசிபி உதவியுடன் மேல்புதூர் கிராமத்தில் தொடங்கி 6ஏக்கர் நிலம் ஜேசிபி மூலம் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை முதல் தொடர்ச்சியாக பல்வேறு கிராமங்களில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த ஆக்கிரமிப்பின் மீட்புப் பணிகள் துணை வட்டாட்சியர் கோமளா வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் , நீர்வள ஆதார துறை பொறியாளர் மார்க்கண்டேயன் மற்றும் காவல்துறை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.