ரயில் நிலைய புதிய கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர பயணிகள் கோரிக்கை
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் அமைக்கபட்டுள்ள நவீன கழிவறையை பயன்பாட்டிற்கு திறந்து விட ரயில் பயணிகள் கோரிக்கை
HIGHLIGHTS
காஞ்சிபுரம் - சென்னை சாலையில் பொன்னேரி கரை அருகே அமைந்துள்ளது புதிய ரயில் நிலையம். சென்னை தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகம் மற்றும் பிற தனியார் அலுவலகம் செல்ல நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆண் , பெண் ரயில் பயணிகள் இந்த ரயில் நிலையத்தின் மூலம் செங்கல்பட்டு , தாம்பரம் மார்க்கமாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
காஞ்சிபுரத்திலிருந்து சென்னை செல்ல குறைந்தபட்ச பயண நேரமாக 2மணி 30 நிமிடங்கள் தேவைப்படுகிறது. மின்சார ரயிலில் கழிவறை இல்லாத நிலையில், காலை 6மணிக்கு வீட்டிலிருந்து முற்பட்டு 7மணி ரயில் பிடித்து 10 மணி அலுவலகம் செல்லும் நிலையில், அவசரத்திற்கு கழிவறை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
பல லட்சம் மதிப்பில் மாற்று திறனாளிகள் உள்ளிட்டோர் பயன்படுத்தும் வகையில் புதிய கழிவறை அமைக்கப்பட்டுள்ள நிலையில் இதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.