Begin typing your search above and press return to search.
குழந்தை தொழிலாளர் ஓழிப்பு ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
காஞ்சிபுரத்தில் குழந்தை தொழிலாளர் ஓழிப்பு ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
HIGHLIGHTS
உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குழந்தை பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக குழந்தைகள் இல்லம் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கிடையே *குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு* என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றதில் சிறப்பாக ஓவியம் வரைந்த குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி , மக்கள் நல்லுறவு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டு சான்றிதழ்கள் அளித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்(பொ) யசோதரன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா உதவி பொது மேலாளர் மோகனவேல், மாவட்ட சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் கிருபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.