/* */

காஞ்சிபுரம் பேராசிரியர் கொலையில் திடுக் தகவல், கைதான உடற்கல்வி ஆசிரியர் பரபரப்பு வாக்குமூலம்

காஞ்சிபுரம் பேராசிரியர் கொலையில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார், வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் பேராசிரியர் கொலையில்  திடுக் தகவல், கைதான உடற்கல்வி ஆசிரியர் பரபரப்பு வாக்குமூலம்
X

காஞ்சிபுரத்தில் தமிழ் பேராசிரியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுதாகர், கொலையான அனிதா

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை அங்காள பரமேஸ்வரி நகரில் வசிப்பவர் வெள்ளைச்சாமி. இவர் தனது மனைவி, மகன் மற்றும் மனைவியின் தங்கையுடன் வசித்து வருகிறார்.

மனைவியின் தங்கையான அனிதா காஞ்சிபுரம் தனியார் கலைக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 9ஆம் தேதி இரவு உணவருந்தி விட்டு இவர் வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று நிலையில் 11 மணி அளவில் வீட்டு மாடியில் இருந்து அலறல் சத்தம் கேட்டு அனைவரும் சென்று பார்த்தபோது அவரது அறை உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. பேராசிரியர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனைத் தொடர்து கதவு உடைக்கப்பட்டு அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். உடலில் பல இடங்களில் காயம் இருந்தது. தொடர்ந்து காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் சந்தேக மரணம் என கூறி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில் கடந்த காலங்களில் அனிதா பணிபுரிந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக சுதாகர் என்பவர் பணிபுரிந்து வந்தார். இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர். அனிதா கல்லூரிக்கு பேராசிரியராகவும், சுதாகர் அரசு பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியராகவும் பணிகள் கிடைத்து சென்று விட்டனர்.

இருந்த போதிலும் இருவரது பழக்கம் தொடர்ந்து உள்ளது. சுகதாகர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

அதனை அனிதாவிடம் தெரிவித்தார். அதற்கு அனிதா நீ யாரை வேண்டமானாலும் திருமணம் செய்து கொள்ள உன் அன்பு மட்டும் எனக்கு வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சுதாகருக்கு திருமணம் நடந்து விட்டது.

இந்த நிலையில் சுதாகர் திருமணமாகிய பின் பேசுவதையும், தனிமையில் சந்திப்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க தொடங்கினார்.

இதனால் மனம் வெறுத்து போன அனிதா என்னுடன் பழகாவிட்டால் உன் குடும்பத்துக்கு சொல்லிவிடுவேன் என்று தொடர்ந்து மிரட்டி சுதாகருடன் பழகிவந்தார்.

கடந்த எட்டு மாதங்களாக சுதாகர் செல்போனில் கூட பேசுவதை நிறுத்திவிட்டார். மீண்டும் அனிதாவின் மிரட்டல் அதிகமானது. இனியும் பொறுக்க முடியாது, அனிதா உயிரோடு இருந்தால் எனது குடும்பவாழ்க்கை கெட்டுவிடும், அனிதாவிடம் பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் இல்லை என்றால் அனிதாவை முடித்துவிடவேண்டும் என்கிற எண்ணத்தில் சுதாகர் அனிதாவின் வீட்டுக்கு சம்பவதன்று வந்துள்ளார்.

எப்போதும் யாருக்கும் தெரியாமல் அனிதாவின் ரூமிற்கு செல்லும் வழியில் மீண்டும் அனிதாவின் அறைக்கு சென்றுள்ளார்.

அப்போது சுதாகர் எவ்வளவோ பேசியும் அனிதா தொடர்பை துண்டிக்க மறுத்துவிட்டார். இதில் ஆத்திரம் அடைந்த சுதாகர் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரி குத்திக் கொலை செய்துவிட்டு ரகசிய வழியாக தப்பியுள்ளார்.

இவ்வாறு போலீசில் பிடிப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் சுதாகர் தெரிவித்ததாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

இதனால் சந்தேக மரண வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு சுதாகரன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் காஞ்சி சரக காவல்துறை துணைத் தலைவர் எம்.பத்மபிரியா மற்றும் காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகரன் ஆகியோர் இவரிடம் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 15 July 2021 1:24 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...