Begin typing your search above and press return to search.
காவல்துறை சார்பில் கபசுரக்குடிநீர் வழங்கும் முகாம்..
காஞ்சிபுரத்தில் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம் சார்பில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
காஞ்சிபுரத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
எனவே பொதுமக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தின் சார்பில் காந்தி சாலை பகுதியில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் டி.எஸ்.பி.எஸ்.மணிமேகலை பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீரை வழங்கி முகாமை தொடக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் விஷ்ணுகாஞ்சி காவல்நிலைய ஆய்வாளர் சுந்தர்ராஜ்,நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நெடுஞ்செழியன் ஆகியோரும் உடன் இருந்தனர்.