/* */

உயர் கோபுர, சோலார் விளக்குகள் நிறுவதல், கொள்முதல் செய்ய ஊராட்சிகளுக்கு தடை

ஊரக உள்ளாட்சிகளில் எந்த ஒரு நிதியில் இருந்தும் உயர்மின் கோபுர விளக்கு, சோலார் விளக்குகள் மற்றும் சோலார் எல்இடி விளக்குகள் கொள்முதல் செய்தல் மற்றும் நிறுவுதலுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

உயர் கோபுர, சோலார் விளக்குகள் நிறுவதல், கொள்முதல் செய்ய ஊராட்சிகளுக்கு  தடை
X

பைல் படம்.

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி இயக்ககத் துறை இயக்குனர் பிரவீன் நாயர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் ஒரு பகுதியை தெருவிளக்கு ஏற்படுத்துகின்றன. அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட நிறுவப்பட்ட தெருவிளக்குகளை கிராம ஊராட்சிகள் பராமரித்து வருகின்றன.

இந்நிலையில் தெரு மின்விளக்குகள் ஏற்படுத்தி பராமரித்தலும், தெரு மின்விளக்குகள் கொள்முதல் செய்வதிலும் மின்விளக்குகளை தேர்வு செய்வதிலும் பெருத்த அளவில் மாறுபாடுகள் ஏற்படுகிறது.

  • மறு உத்தரவு வரும்வரை மூன்றடுக்கு ஊராட்சிகள் எந்த ஒரு நிதியில் இருந்தும் உயர் கோபுர மின் விளக்குகள், சிறுமீன் கோபுர விளக்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட விளக்குகள் கொண்ட கம்பிகளுடன் கூடிய தெருவிளக்குகள் அமைத்திட தடை செய்யப்படுகிறது.
  • சோலார் உயர்மின் கோபுர விளக்குகள் அமைப்பதும் முழுவதும் மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்படுகிறது.
  • சோலார் எல்இடி விளக்குகள் கம்பங்களும் கொள்முதல் செய்தல் உடனடியாக தடை செய்யப்படுகிறது.

இதனை மீறி கொள்முதல் செய்யும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் மீது விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் இதுதொடர்பான செலவிடப்படும் தொகை அவர்களிடமிருந்து பிடித்தம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளும் அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 8 Jan 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  2. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  4. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  5. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  7. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  10. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...