/* */

தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு முதல் கட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
X

ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி வகுப்பில், தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள ஊழியர்களுக்கு அறிவுரைகளை வழங்கிய ஆட்சியர் கலைச்செல்வி

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், பென்னலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவு அலுவலருக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலரும் , மாவட்ட ஆட்சியருமான கலைச்செல்வி பார்வையிட்டு ஊழியர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்த விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தல் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடிகள் மற்றும் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட உத்திரமேரூர், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் அனைத்துத் துறைகளிலிருந்தும் மொத்தம் 6800 அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்குக்கான முதற்கட்ட பயிற்சிகள் காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.

சென்னை கன்டோன்மென்ட் பகுதி புனித மான்போர்ட் பள்ளி, பென்னலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம் ஓரிக்கை பாரதிதாசன் மேல்நிலைப் பள்ளி மற்றும் காஞ்சிபுரம் SSKV மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற பயிற்சியில் தேர்தல் பணி ஊழியர்கள் கலந்து கொண்டனர்

திருப்பெரும்புதூர் வட்டம், பென்னலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவு அலுவலருக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலரும் , மாவட்ட ஆட்சியருமான கலைச்செல்வி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பயிற்சி குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் தேர்தல் விதிமுறைகள் மற்றும் பல்வேறு ஆலோசனைகளையும் ஆட்சியர் அலுவலர்களுக்கு வழங்கினார். எவ்வித சலசலப்புக்கும் இடமளிக்காமல் அனைவரும் நேர்மையாக பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இவ்ஆய்வின் போது ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 24 March 2024 2:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்