/* */

காஞ்சிபுரத்தில் திமுக நிர்வாகி கொலை வழக்கில் நான்கு பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்ட திமுக பிரதிநிதி சேகர் கொலை வழக்கில் அண்ணன்,தம்பி உள்ளிட்ட நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் திமுக நிர்வாகி கொலை வழக்கில் நான்கு பேர் கைது
X

கைதானவர்கள். 

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி தாலுக்கா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கோனேரிக்குப்பம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சேகர் என்பவர் கடந்த 25.02.2022 அன்று வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக காஞ்சி தாலுக்கா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகளை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் காஞ்சிபுரம் ஜீலியஸ் சீசர் மேற்பார்வையில், வெங்கடேசன், ஆய்வாளர் பாலுசெட்டிசத்திரம் தலைமையில், ஒரு தனிப்படையும் உதவிஆய்வாளர்கள் சிவகுமார், முரளி தலைமையில் மாவட்ட தனிப்படையும் என இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் எதிரிகளை தேடிவந்த நிலையில் இன்று, இளவரசன் ( 26 ) , சக்தி ( எ ) சதீஷ்குமார் ( 23 ), அஜித் ( 25 ), ரங்கா ( 19 ) ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்த தனிப்படையினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

Updated On: 1 March 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  6. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  7. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  8. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...