கொரோனா நோயாளி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை ..
காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் பெருமாள் கோயில் அருகே உள்ள வரதப்பா நகரை சேர்ந்தவர் கோபி என்ற கோபாலகிருஷ்ணன். இவர் கடந்த 11ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு காஞ்சிபுரம் செட்டியார் பேட்டை பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த கோபாலகிருஷ்ணன் இன்று மதியம் 2மணியளவில் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
தகவல் அறிந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
நோய் தொற்று காரணமாக கோபாலகிருஷ்ணன் நேற்று முதல் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் இந்நிலையில் இதுபோன்ற முடிவு எடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் சாப்டீங்களா என முதல்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.