சீட்டணஞ்சேரி ஸ்ரீ காளீஸ்வரர் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம்
உத்திரமேரூர் வட்டம் சீட்டணஞ்சேரி கிராமத்தில் 82 ஆண்டுகளுக்கு பிறகு செய்யப்பட்ட மரத்தேரில் ஸ்ரீ காளீஸ்வரி எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
HIGHLIGHTS
கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான புகழ்பெற்ற திருக்கோயில்கள் அமைந்துள்ளது. அவ்வகையில் உத்தரமேரூர் அடுத்த சீட்டணஞ்சேரி கிராமத்தில் பாலாற்றங்கரையில் தென்புறத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை ஸ்ரீகாளீஸ்வரர் திருக்கோயில்.
இத்திருக்கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கி நாள்தோறும் சிவகாமசுந்தரி உடனுறை ஸ்ரீ காளீஸ்வரி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று ஏழாம் நாள் பிரம்மோற்சவ விழாவில் 82 ஆண்டுகளுக்கு பிறகு செய்யப்பட்ட புதிய மரத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இவ்விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன், சென்னை தீனா கலர் லேப் உரிமையாளர் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் வடம் பிடித்து தேர் கிராம வீதிகளில் வலம் வந்தனர். வழியெங்கும் ஸ்ரீ காளீஸ்வருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் ஆங்காங்கே அன்னதானமும் கோடையை முன்னிட்டு மோர் குளிர்பானங்கள் என பலவற்றை பொதுமக்கள் வழங்கினர்.
கிராம வீதிகளில் வலம் வந்தபின் சிறப்பு பூஜைக்கு பின் பெயர் திருக்கோயில் முன்பு நிலைநிறுத்தப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டனர்.