கிடப்பில் உள்ள திருபருத்திகுன்றம் - கீழம்பி பைபாஸ் விரிவாக்கப்படுமா?
சாலை விரிவாக்கத்தால் நகரினுள் செல்லாமல் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையினை 15 நிமிடங்களில் சென்றடைவதால் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் எதிரே செல்லும் சாலை, காஞ்சிபுரம் - கீழம்பி சாலையை இணைக்கிறது. இதனால் நகரவாசிகள் நகரினுள் செல்லாமல் இவ்வழியாக சென்று சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் எளிதாக குறைந்த நேரத்தில் பயணிக்காலாம்.
தற்போது இந்த சாலை குறுகிய சாலையாக பல்வேறு இடங்களில் இருப்பதால் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் நகரில் நாளுக்குநாள் வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது மாவட்ட நிர்வாகம் காவல்துறை இணைந்து பல மாற்றங்களை கொண்டு வந்தாலும் நெரிசல் குறையவில்லை.
இந்நிலையில், இந்த திருபருத்திகுன்றம் வழியாக செல்லும் இந்த பாதையை அகலப்படுத்தி வாகனங்கள் விபத்தில் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என நீண்ட நாளாக கோரிக்கையை உள்ளது. சாலை அமைப்பதற்கான இடம் குறித்த ஆய்வுகள் முடிந்து பணிகள் துவக்கமால் காலதாமதமாகவே உள்ளதால் பொது மக்களிடையே அதிருப்தி காணப்படுகிறது.
இரவு நேரங்களில் பல்வேறு கூட்டு சாலையில் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கள் சந்திப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.