கைக்குழந்தையுடன் மேயர் தேர்தலில் கலந்துகொண்ட பாஜக பெண் உறுப்பினர்
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் பாஜக விஜிதா அருண்பாண்டியன் கைக்குழந்தையுடன் வந்து வாக்களித்தார்.
HIGHLIGHTS
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு 21 வது வார்டு உறுப்பினர் பதவிக்கான போட்டியில் திமுக வேட்பாளர் ரதி , அதிமுக வேட்பாளரா உத்ரா, பாஜக சார்பில் விஜிதா உள்ளிட்ட 6 பேர் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிவில் விஜிதா 1183 வாக்குகளும், திமுகவை சேர்ந்த ரதி 989 வாக்குகளும் , அதிமுகவை சேர்ந்த உத்ரா 649 வாக்குகளும் பெற்றனர். இதில் 194 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை சேர்ந்த விஜிதா அருண்பாண்டியன் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் பதவியேற்ற பின் நேற்று மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் விஜிதா அருண்பாண்டியன் கலந்துகொண்டு இரு வேளைகளிலும் நடைபெற்ற மறைமுக தேர்தலில் வாக்களித்தார்.
மேயர் மறைமுக தேர்தல் மாமன்ற கூட்டரங்கு கதவுகள் மூடப்பட்டு நடைபெற்ற போது சிறிது கூச்சலும் குழப்பமும் ஏற்பட்ட நிலையில் குழந்தை தனது தாயுடன் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
கைக்குழந்தையுடன் மாமன்ற மறைமுக தேர்தலில் கலந்துகொண்ட அவருக்கு மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.