/* */

சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவக்கம்

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு சட்டமன்ற தொகுதி வாரியாகவாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவங்கி உள்ளது.

HIGHLIGHTS

சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவக்கம்
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே உள்ள தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்

நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை நான்கு சட்டமன்ற தொகுதிக்கு அனுப்பும் பணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அனைத்து கட்சி பிரமுகர்கள் முன் தொடங்கி நடைபெற்று வருகிறது .

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அடுத்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.


கடந்த இரு தினங்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் துவங்கிய நிலையில் இதுவரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளான ஆலந்தூர் ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் மற்றும் உத்தரமேரூர் ஆகிய தொகுதிகளில் 1417 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டவுள்ளது.

இந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் 5572 வாக்குப்பதிவு கருவிகள் ( Ballot unit ) , 2263 வாக்கு கட்டுப்பாட்டு கருவிகள் ( Control Unit ) , 1945 இயந்திரம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவி( VVPAT) உள்ளிட்டவை தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டு அறையில் சீலிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பும் பணி இன்று காலை 9 மணி அளவில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பாதுகாப்பு அறையின் சீல் அகற்றி வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறையில் தேர்வு செய்து அனுப்பி வைக்கும் பணியினை ஆட்சியரும், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி துவக்கி வைத்து பார்வையிட்டு வருகிறார்.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் , பயிற்சி ஆட்சியர் சங்கீதா , மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், கோட்டாட்சியர்கள் கலைவாணி சரவணக்கண்ணன் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்துச் செல்லும் வாகனத்திற்கு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புக்கு சென்று உரிய சட்டமன்றத் தொகுதி இருப்பு அறையில் ஒப்படைப்பார்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒவ்வொரு இடத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டு அந்த அறையும் சீலிட்டு காவல்துறை பாதுகாப்புடன் கண்காணிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Updated On: 22 March 2024 11:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  2. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  5. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  6. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  8. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  9. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  10. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...