இ -சேவை மைய ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு அரசுக்கு கோரிக்கை
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சார்பாக இ-சேவை மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள், சம்பள உயர்வு கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
தமிழ்நாடு அரசின் நிறுவனமான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட் தமிழகம் முழுவதும் சுமார் 595 இ சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது.
அந்த இ சேவை மையங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அந்த ஊழியர்களுக்கு மாத சம்பளமாக ரூ 7778 என்கிற குறைந்த ஊதியமே இதுவரை வழங்கப்பட்டு வருகிறது
தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் அந்த ஊழியர்களின் ஊதியத்தில் 1000 முதல் 3000 வரை அனைத்து ஊழியர்களுக்கும் எவ்வித காரணமும் கூறாமல் முன்னறிவிப்பும் செய்யாமல் திடீரென சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் 28 மாவட்டங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சரும் , தகவல் தொழில்நுட்ப அமைச்சரும் , உடனடியாக இப்பிரச்சினையில் தீர்வு கண்டு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என இ சேவை மைய ஊழியர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பரணிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.