காஞ்சிபுரம் அருகே இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்
காஞ்சிபுரம் அருகே உள்ள ஓரிக்கையில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடந்தது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் மகா பெரியவர் சதாப்தி மணி மண்டபம் அமைந்துள்ளது. அங்கு காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முகாமிட்டு தினசரி சந்திர மௌலீஸ்வரர் பூஜை நடத்தி வருவதுடன் பக்தர்களுக்கு ஆசியும் வழங்கி வருகிறார். இதனை ஒட்டி மணிமண்டபத்திற்கு வரும் பக்தர்களுக்கு காஞ்சிபுரம் சங்கர மடத்தின் சார்பில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தின் ஆயுர்வேத மருத்துவர் எஸ்.ஆர்.பி.சாய்நாதன் தலைமையிலான குழுவினர் இலவசமாக மருத்துவ ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவர் எஸ்.ஆர்.பி.சாய்நாதன் கூறுகையில் மருத்துவ ஆலோசனைகளும், பக்கவிளைவுகள் இல்லாத ஆயுர்வேத மருந்துகளும் முகாமில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேல் சிகிச்சை தேவை உள்ளவர்கள் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறோம். மீண்டும் வரும் 12ம் தேதி இலவச மருத்துவ முகாம் நடைபெறும். மற்ற நாட்களில் சங்கர மடத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் ஆலோசனைகளை பெறலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.